புதுச்சேரி மத்திய சிறையில் கைதிகளுக்கிடையே மோதல்: தடுக்க சென்ற 2 காவலர்கள் படுகாயம்

புதுச்சேரி: புதுச்சேரி மத்திய சிறையில் கைதிகளுக்கிடையே மோதல் ஏற்பட்டதை அடுத்து தடுக்க சென்ற 2 காவலர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். பலத்த காயம் அடைந்த சிறை காவலர்கள் ஜீவரத்தினம், பாவாடைசாமி ஆகியோருக்கு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கைதிகள் ரிஷி மற்றும் விளக்கி ஆகியோர் இருதரப்பாக பிரிந்து கல் மற்றும் தட்டுகளை கொண்டு தாக்கி கொண்டனர். விசாரணை கைதி விளக்கியும் பலத்த காயம் அடைந்ததால் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

Related Stories: