நாகை: நாகூர் பட்டினச்சேரியை சேர்ந்த மீனவர் வலையில் ஒன்றரை டன் எடை கொண்ட திமிங்கலம் சிக்கியது. நாகூர் பட்டினச்சேரியை சேர்ந்தவர் மூர்த்தி. இவர் நேற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றார். மீன்களை பிடிக்க கடலில் வலையை வீசினார். அப்போது அவரது வலையில் ஒன்றரை டன் எடைகொண்ட திமிங்கலம் சிக்கியது. உடனே அவர் அதை நாகூர் வெட்டாறு கரைக்கு எடுத்து வந்தார்.