தொடர் குற்றங்களில் ஈடுபட்ட மோசடி ஆசாமி உட்பட 9 பேருக்கு குண்டாஸ்

சென்னை: சென்னையில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி, பலரிடம் பல லட்சம் பணம் பெற்று மோசடி செய்த மயிலாப்பூர் சாந்தோம் பகுதியை சேர்ந்த டேனியல்ராஜ் (39), கொலை வழக்கில் தொடர்புடைய சிக்கராயபுரம் சிவசக்தி நகரை சேர்ந்த முத்துகுமரன் (39), ஜெகநாதன் (எ) ஜெகன் (23), கோவூர் ஈஸ்வரன் நகர் முதல் தெருவை சேர்ந்த தாமோதரன் (எ) அப்பு (23), திருட்டு வழக்கில் தொடர்புடைய மேற்கு தாம்பரம் கஸ்தூரிபாய் நகரை சேர்ந்த தினேஷ்குமார் (எ) தினேஷ் (25), பைக் திருட்டில் தொடர்புடைய தண்டையார்பேட்டை தாண்டவராயன் தெருவை சேர்ந்த மகேஷ் (26), வழிப்பறி வழக்கில் தொடர்புடைய கொடுங்கையூர் ஆர்.கே.நகர் பகுதியை சேர்ந்த கபீர் (எ) கானா கபீர் (23), கொலை வழக்கில் தொடர்புடைய வியாசர்பாடி 5வது தெருவை சேர்ந்த ராஜேஷ் (37), திருட்டு வழக்கில் தொடர்புடைய வியாசர்பாடி எம்.கே.பி.நகரை சேர்நத் ரசூல்கான் (38) ஆகிய 9 பேரை போலீஸ் கமிஷனர் ஏ.ேக.விஸ்வநாதன் உத்தரவுப்படி போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

Related Stories: