அண்ணாநகர்: பாடி அருகே நடந்து சென்ற வாலிபரை தாக்கி, அவரிடம் இருந்து விலை உயர்ந்த செல்போன் மற்றும் ₹2 ஆயிரத்தை பறித்து சென்ற 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை பாடி, சிவன் கோயில் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ் (24). இவர் நேற்று அதிகாலை 3 மணியளவில் வேலை முடிந்து, பாடி மேம்பாலத்தின் கீழ்ப்பகுதி வழியாக வீட்டுக்கு நடந்து சென்றார். அப்போது பைக்கில் முகமூடி அணிந்து வந்த 2 பேர், அவரை வழிமறித்து, கத்தியை காட்டி பணம், செல்போனை பறிக்க முயற்சித்தனர்.