சென்னை: சென்னை ஆவடி மத்திய கனரக தொழிற்சாலையில் சிஆர்பிஃ வீரர் ஒருவர் தன்னுடைய சக வீரரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அடுத்த ஆவடியில் கனரக வாகன தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் ராணுவத்திற்கு தேவையான உதிரி பாகங்கள் , டேங்க் உள்ளிடவை தயார் செய்யப்பட்டு வருகிறது. மேலும் இந்த தொழிற்சாலையில் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இங்கு வடமாநிலங்களை சேர்ந்தவர்கள் பலர் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை இங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. பணிமாற்றம் செய்ய வந்த போது அவர்களிடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இத்தொழிற்சாலையில் இன்று காலை கிரிஜேஷ்குமார் என்பவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்துள்ளார்.