பெங்களூர்: சர்ச்சை சாமியாரான நித்யானந்தா மீது 2010ல் பாலியல் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஜாமீன் பெற்று நித்தியானந்தா வெளியே வந்துள்ளார். பாலியல் வழக்குத் தொடர்பாகக் கடந்த 9 ஆண்டுகளாகக் கர்நாடக ராம் நகர நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது. இந்த விசாரணையில் நம்பிக்கை இல்லை என்றும், வழக்கை உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்றும், லெனின் கருப்பன் தொடர்ந்த வழக்கில், ராம்நகர நீதிமன்ற விசாரணைக்கு தடை விதிக்கப்பட்டது. பாலியல் புகாரில் சிக்கியுள்ள நித்தியானந்தாவுக்கு எதிராக 2 வழக்குகள் மீது, கர்நாடக நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெறவுள்ளது. பாலியல் தொடர்பான வழக்கு விசாரணையின் போது ராம்நகர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் 40 வாய்தாக்களுக்கு மேல் நித்தியானந்தா நேரில் ஆஜராகவில்லை.