அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்பாலாஜி வீட்டில் போலீசார் சோதனை

கரூர்: அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்பாலாஜி வீட்டில் போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கரூர் ராமேஸ்வரப்பட்டியில் உள்ள செந்தில்பாலாஜி வீடு, அவரது தாய் மற்றும் தம்பி ஆகியோரது வீடுகளில் சென்னை போலீஸ் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கரூரில் டிஎஸ்பி தலைமையில் 15 போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் உள்ள செந்தில்பாலாஜி வீட்டிலும் போலீஸ் சோதனை நடத்தி வருகிறது.

Related Stories: