திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குள் பல்வேறு கட்ட சோதனைகளையும் மீறி பக்தர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வந்து தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் இலவச தரிசனத்திற்கு செல்லக்கூடிய வைகுண்டம் காம்ப்ளக்ஸ்-2 அருகே நேற்று முன்தினம் இரவு நீண்ட வரிசையில் ஏராளமான பக்தர்கள் காத்திருந்தனர். நண்பகல் 11 மணியவில் பக்தர் ஒருவர், தான் கையில் வைத்திருந்த பெட்ரோல் பாட்டிலை திறந்து தன் மீது திடீரென பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதனால், வரிசையில் நின்றிருந்த பக்தர்கள் அலறியடித்துக் கொண்டு நாலாபுறமும் சிதறி ஓடினர்.