ஊட்டி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகேயுள்ள கோடநாட்டில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களாவுக்குள் கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24ம் தேதி நுழைந்த கும்பல் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலாளி ஓம்பகதூரை கொலை செய்துவிட்டு உள்ளே சென்றது. மேலும் பங்களாவில் இருந்த சில ஆவணங்களை கொள்ளை அடித்து சென்றது. இவ்வழக்கில், முக்கிய குற்றவாளி கனகராஜ் சேலம் அருகே விபத்தில் பலியானார். இவ்வழக்கில் தொடர்புடைய சயான், கேரளாவை சேர்ந்த சந்தோஷ், தீபு, சதீசன், உதயகுமார், வாளையார் மனோஜ், மனோஜ் சமி, ஜித்தீன் ஜாய், ஜம்சீர் அலி மற்றும் பிஜின் குட்டி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதில் சயான், வாளையார் மனோஜ் ஆகியோர் கோவை மத்திய சிறையிலும் மற்ற 8 பேர் ஜாமீனிலும் உள்ளனர்.