கொடைக்கானல் திரு இருதய ஆண்டவர் தேவாலயத்தில் ஈஸ்டர் உயிர்ப்பு திருவிழா நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனையில் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் கையில் மெழுகு திரி ஏந்தி பிரார்த்தனை செய்தனர். இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த நிகழ்வை குறிக்கும் ஈஸ்டர் பண்டிகை இன்று கொண்டாடப்படும் நிலையில், தமிழ்நாடு முழுவதும் கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெறுகிறது.
