கோவை: கோவை சிங்காநல்லூர் தொழிலதிபர் ஆதம்ஷா என்பவரின் வீட்டை உடைத்து 100 சவரன் நகை மற்றும் 10 லட்சம் ரூபாய் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. தூத்துகுடி மாவட்டத்தை சேர்ந்த ஆதம்ஷா, கோவை சிங்காநல்லுரில் வசித்து வருகிறார். பட்டணப்பகுதியில் இன்ஜினீயரிங் கம்பனி வைத்திருக்கும் ஆதம்ஷா கடந்த 24ம் தேதி தனது வீட்டை பூட்டி விட்டு தனது குடும்பத்துடன் சிவகாசியில் உள்ள உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்று விட்டார். இந்நிலையில் நேற்று இரவு வீடு திரும்பிய ஆதம்ஷா வீட்டின் பின்புற கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும் வீட்டினுள் சென்று பார்த்தபோது அங்கிருந்த 3 பீரோக்களையும் உடைத்து அதிலிருந்த 100 சவரன் நகை மற்றும் 10 லட்சம் ரூபாய் ரொக்க பணமும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.