விளாத்திகுளம்: தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே புதூர் யூனியனுக்கு உட்பட்ட என்.ஜெகவீரபுரம் பஞ்சாயத்திற்கு உட்பட்டது எஸ்.குமராபுரம் கிராமம். இங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 12 மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். பள்ளியில் ராஜா என்பவர் தலைமையாசிரியராகவும் பாக்கியசெல்வி என்பவர் இடைநிலை ஆசிரியையாகவும் பணியாற்றி வருகின்றனர். குடியரசு தினமான நேற்று விளாத்திகுளம் எம்எல்ஏ சின்னப்பன், புதூர் பிடிஓக்கள் பிரபு, சிவபாலன், மாவட்ட கவுன்சிலர் ஞானகுருசாமி உட்பட பலர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி புதியகட்டிடம் தொடங்குவதற்கான அடிக்கல் நாட்டு விழாவிற்கு காலை 11.30 மணிக்கு மேல் சென்றுள்ளனர்.