பெரியார் குறித்து சர்ச்சை கருத்து நடிகர் ரஜினி பேசியதை திரும்ப பெற வேண்டும்: முதல்வர் நாராயணசாமி பேட்டி

புதுச்சேரி: புதுவை முதல்வர் நாராயணசாமி நேற்று அளித்த பேட்டி: பகுத்தறிவு ஆசானாக இருந்து மக்கள் மத்தியில் இருக்கும் மூட நம்பிக்கைகளை போக்க வாழ்நாள் முழுவதும் போராடியவர், தனிமனித உரிமைக்கும் தனது வாழ்நாளை அர்பணித்தவர் தந்தை பெரியார். நடிகர் ரஜினிகாந்த் விழா ஒன்றில் பேசும்போது பெரியார் பற்றி விமர்சனம் செய்துள்ளார். உண்மையாக அந்த சம்பவம் நடந்ததா? என ஆராய்ந்து பேசி இருக்க வேண்டும். சில தகவல்களை வைத்து தந்தை பெரியாரையும் திராவிட கழகத்தையும் பேசி இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. எந்தவிதமான முகாந்திரமும் இல்லாமல் பேசியிருப்பது வருத்தத்துக்குரியது. அவர் கருத்தை திரும்ப பெற்று இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இந்த சர்ச்சையில் அவர் தலையிடாமல் இருப்பது நல்லது. இவ்வாறு நாராயணசாமி கூறினார்.

Related Stories: