நாகை: நாகூர் தர்கா கந்தூரி விழாவை முன்னிட்டு இன்று அதிகாலை பாய்மரம் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நாகை மாவட்டம் நாகூரில் உலக பிரசித்தி பெற்ற ஆண்டவர் தர்கா உள்ளது. இந்த தர்காவிற்கு வெளி மாவட்டம், வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த தர்காவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா நடைபெறும். இதன்படி இந்த ஆண்டு கந்தூரி விழா வருகிற 26 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதை முன்னிட்டு நாகூர் தர்காவில் உள்ள 5 மினராக்களிலும் பாய்மரங்கள் ஏற்றும் நிகழ்ச்சி இன்று அதிகாலை நடைபெற்றது. தர்கா கலிபா துவா ஓதி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.