புதுடெல்லி: கடந்த 5 ஆண்டுகளில் எல்ஐசி.யின் வராக்கடன் 30,000 கோடியாக அதிகரித்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனை மேற்கோள் காட்டி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று வெளியிட்ட டிவிட்டர் பதிவில், `கோடிக்கணக்கான மக்கள் எல்ஐசி மீது வைத்திருந்த நம்பிக்கையினால் அதில் முதலீடு செய்துள்ளனர். ஆனால், மோடி அரசு மக்கள் எல்ஐசி. மீது வைத்திருந்த நம்பிக்கையை கெடுத்தது மட்டுமின்றி, மக்களின் எதிர்காலத்தையும் சேதப்படுத்தி விட்டது. பிரதமர் மோடியின் குறுகிய கால நடவடிக்கைகள் மக்களிடையை அச்சத்தை ஏற்படுத்தி உள்ளன. இது பயங்கர விளைவுகளை உண்டாக்கும்,’ என்று கூறியுள்ளார்.