விருதுநகர் : எம்ஜிஆர் உடன் இருந்ததால் தான் அண்ணா இந்த நாட்டிற்கு அடையாளம் காட்டப்பட்டார் என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியது சர்ச்சையாகி உள்ளது. விருதுநகர் தேசபந்து மைதான திடலில் நடைபெற்ற எம்ஜிஆர் 103-வது பிறந்த நாள் விழாவில் பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அதாவது அண்ணா பக்கத்தில் எம்ஜிஆர் இருந்ததால் தான் இந்த நாட்டிற்கு அண்ணா அடையாளம் காட்டப்பட்டு தமிழகத்தின் முதலமைச்சராக ஆக்கப்பட்டார். எம்ஜிஆரை பார்த்துத்தான் அண்ணாவிற்கே ஓட்டு போட்டார்கள் என்று அவர் தெரிவித்தார்.