எம்ஜிஆர் மூலமே அண்ணா அடையாளம் காணப்பட்டார்...:எம்ஜிஆர் பிறந்தநாள் விழாவில் அமைச்சர் சர்ச்சை பேச்சு

விருதுநகர் : எம்ஜிஆர் உடன் இருந்ததால் தான் அண்ணா இந்த நாட்டிற்கு அடையாளம் காட்டப்பட்டார் என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியது சர்ச்சையாகி உள்ளது. விருதுநகர் தேசபந்து மைதான திடலில் நடைபெற்ற எம்ஜிஆர் 103-வது பிறந்த நாள் விழாவில் பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அதாவது அண்ணா பக்கத்தில் எம்ஜிஆர் இருந்ததால் தான் இந்த நாட்டிற்கு அண்ணா அடையாளம் காட்டப்பட்டு தமிழகத்தின் முதலமைச்சராக ஆக்கப்பட்டார். எம்ஜிஆரை பார்த்துத்தான் அண்ணாவிற்கே ஓட்டு போட்டார்கள் என்று அவர் தெரிவித்தார்.

திமுக-வை உருவாக்கி திராவிட இயக்கங்கள் தமிழகத்தில் வளர காரணமானவர் அண்ணா. வாழ்க அண்ணா நாமம் எனச் சொல்லியே அரசியலில் எம்.ஜி.ஆர் வெற்றி கண்டார். மேலும் அண்ணா நாமத்தை ஜெயலலிதாவும் உச்சரிக்கத் தவறியதில்லை. இதனை தொடர்ந்து கட்சியின் பெயரில் அண்ணா இருக்கிறார்; கொடியிலும் அவர் உருவமே பொறிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவரை பற்றி முழுவதும் தெரியாமல் தமிழக அமைச்சரவையில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இடம்பிடித்துள்ளார் என்று அதிமுகவினரே வேதனை தெரிவித்துள்ளனர்.

Related Stories: