தாராபுரம்: தாராபுரத்தில் சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு தத்துருவமாக சாலை விபத்து நாடகம் நடத்தப்பட்டது. அண்ணா சாலை அருகே 31-வது சாலை பாதுகாப்பு வார விழா நடைபெற்றது. அப்போது எமதர்மர் போல வேடம் அணிந்த நபர் தலைக்கவசம் அணியாமல் வருபவர்களை தனது பாசக்கயிற்றை வீசி அவர்களை விபத்துக்குள்ளாக்கி உயிரை பறிப்பது போன்ற நாடகம் நடத்தப்பட்டது.