சென்னை: தொழிற்சாலைகள் தொழிலாளர் நல நிதியை 31ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என தொழிலாளர் நலவாரிய செயலாளர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தொழிலாளர் நல வாரிய செயலாளர் உமாதேவி வெளியிட்டுள்ள அறிக்கை: தொழிற்சாலைகள், மோட்டார் போக்குவரத்து, மலைத்தோட்ட நிறுவனங்கள், 5க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரியும் கடைகள், உணவகங்களில் பணிபுரியும் ஒவ்வொரு தொழிலாளியின் பங்காக 10% வேலை அளிப்பவர் பங்காக 20% என மொத்தம் 30% தொழிலாளர் நல நிதி பங்கு தொகையாக நிர்வாகம் செலுத்த வேண்டும்.