எக்ஸ்பிரஸ் ரயிலில் பெர்த் விழுந்து பயணி காயம்

மதுரை:  சென்னை தாம்பரத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவு 7.20 மணிக்கு நாகர்கோவிலுக்கு விரைவு ரயில் கிளம்பியது. எஸ்10 பெட்டியில் படுக்கை எண் 33ல் தூத்துக்குடி மாவட்டம், கடம்பூரைச் சேர்ந்த தர்மராஜ் (70) கீழ் ெபர்த்தில் தூங்கி கொண்டிருந்தார்.

நேற்று அதிகாலை 2 மணியளவில் நடுவில் உள்ள ெபர்த்தில் திடீரென சங்கிலி கழன்று, லோயர் ெபர்த்தில் தூங்கி எழுந்த தர்மராஜ் மீது விழுந்தது. இதில் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. சத்தம் கேட்டு பக்கத்து படுக்கையில் இருந்தவர்கள் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். ரயில் மதுரைக்கு வந்ததும் ரயில்வே ஊழியர்கள் படுக்கையை சரி செய்தனர். இதனால் அரை மணிநேரம் தாமதமாக ரயில் புறப்பட்டது.

Related Stories: