சென்னை: தாய்லாந்து நாட்டு தலைநகர் பாங்காக்கில் இருந்து தாய் ஏர் லைன்ஸ் விமானம் நேற்று அதிகாலை 1 மணிக்கு சென்னை வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது சென்னையை சேர்ந்த சுரேஷ் (32) என்பவர் தாய்லாந்து நாட்டில் இருந்து சுற்றுலா பயணியாக போய்விட்டு இந்த விமானத்தில் திரும்பி வந்தார். அவர் பிளாஸ்டிக் கூடை ஒன்றை எடுத்து வந்திருந்தார். அதில் வீட்டில் வளர்ப்பதற்கான செல்லப் பிராணிகளான உயர் ரக நாய்குட்டிகளை முறையான அனுமதி பெற்று வாங்கி வந்திருக்கிறேன் என பயணி கூறினார். அதை திறந்த பார்த்தபோது தாய்லாந்து, கம்போடியா, மத்திய அமெரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் லாவோஸ் போன்ற அடர்ந்த வனப்பகுதியில் வாழும் அபூர்வ வகை விலங்குகளை வைத்திருந்தார். அதில் மர்மோசெட் என்ற குரங்குகள் 2, பல்லிகள் 15, அனில்கள் 5, ஓணான்கள் 5, என மொத்தம் 27 விலங்குகள் இருந்தன.