வனத்துறை படகு கவிழ்ந்து சிறுவன் பலி

தொண்டி: ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே காரங்காடு கடற்கரையில், சதுப்பு நிலக்காடுகள் 5 கிமீ சுற்றளவில் உள்ளன. இங்கு வனத்துறையின் படகு சவாரி மிகவும் பிரபலம். பொங்கல் விடுமுறையை முன்னிட்டு நேற்று மதுரை மற்றும் தொண்டி அருகே உள்ள உசிலிணகோட்டை கிராமத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 15 பேர் படகு சவாரி சென்றனர். அப்போது படகு நிலை தடுமாறி கவிழ்ந்துள்ளது. இதில் விஸ்வா (5) உள்பட 3 குழந்தைகள் நீரில் தவறி விழுந்தனர். உடனிருந்தவர்கள் 2 குழந்தைகளை மீட்டனர். விஸ்வா தண்ணீரில் மூழ்கி பலியானான்.

Related Stories: