திருவையாறு: திருவையாறு தியாகராஜர் ஆராதனை நிறைவு விழாவில் பஞ்சரத்ன கீர்த்தனை பாடி ஆயிரக்கணக்கான கலைஞர்கள் இசை அஞ்சலி செலுத்தினர்.தஞ்சை மாவட்டம் திருவையாறில் தியாகராஜர் 173வது ஆராதனை விழா கடந்த 11ம் தேதி துவங்கியது. துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு துவக்கி வைத்தார். இதைதொடர்ந்து தினம்தோறும் இசைநிகழ்ச்சி நடந்தது.நிறைவு நாளான நேற்றுமுன்தினம் காலை 8.30 மணிக்கு மங்கள இசை நடந்தது. அதைத்தொடர்ந்து 9மணிக்கு விழா பந்தலில் சுதா ரகுநாதன், மஹாநதி சேபானா மற்றும் ஆயிரக்கணக்கான கர்நாடக இசைக்கலைஞர்கள், பாடகர்கள் கலந்து கொண்டு ஒரே குரலில் பஞ்சரத்ன கீர்த்தனை பாடி தியாகராஜருக்கு இசை அஞ்சலி செலுத்தினர்.
தியாகராஜர் ஆராதனை விழா நிறைவு பஞ்சரத்ன கீர்த்தனை பாடி 1000 கலைஞர்கள் இசை அஞ்சலி
- தியாகராஜா வணக்க விழா
- பஞ்சரத்ன கீர்த்தனை பாடும் 1000 கலைஞர்கள்
- வழிபாட்டு விழா
- கலைஞர்கள்
- Theagaraja
- பஞ்சரத்ன கீர்த்தன் இசை