சென்னை: ஆந்திராவில் இருந்து கடத்தி வந்த ₹2 லட்சம் மதிப்புள்ள குட்காவை போலீசார் காருடன் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பேரை கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை அடுத்த ஒரகடம் போலீசார், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மாத்தூர் பகுதியில் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு காரை மறித்து சோதனை செய்தனர். அதில், 21 மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அந்த மூட்டைகளை பிரித்து சோதனை செய்தபோது, அதில் குட்கா மற்றும் பான் மசாலா பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து காரில் இருந்த 2 வாலிபர்களை, கார் மற்றும் குட்கா பொருட்களுடன் காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர்.