சென்னை: சென்னையில் மாங்காடு அருகே தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் பூட்டை உடைத்து கொள்ளையில் ஈடுப்பட்டவரை போலீசார் கைது செய்துள்ளனர். விருகம்பாக்கத்தில் வசிக்கும் தனியார் நிறுவன ஊழியர் அமர்நாத் என்பவரின் வீட்டில் கடந்த மாதம் 20-ம் தேதி கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்மநபர்கள் 30 சவரன் நகையை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இது குறித்து அமர்நாத் அளித்த புகாரின் பெயரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.