பெங்களூரு: சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த அப்துல் சமீம், தவுபிக் ஆகியோரை கர்நாடக காவல்துறை கைது செய்துள்ளது. தமிழக-கேரள எல்லையில் குமரி மாவட்டம் களியக்காவிளை சந்தை ரோட்டில் சோதனைச் சாவடி உள்ளது. இந்த சோதனை சாவடியில் பணியில் இருந்த களியக்காவிளை சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் (வயது 57) கடந்த 8-ம் தேதி பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய 2 பேர் இந்த கொலையில் ஈடுபட்டது தெரிய வந்தது. போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்திய நிலையில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கர்நாடக மாநிலத்தில் குற்றவாளிகள் பிடிபட்டதாக முதல்கட்ட தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.