வேலூர்: ஒரே ஆண்டில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 2வது தடவையாக சீருடைகளில் வண்ணம் மாற்றப்பட்டிருந்தது பெற்றோர் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு நிதியுதவி பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும் 40.66 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் 4 ஜோடி இலவச சீருடைகள் வழங்கப்படுகிறது. 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு 2019-20ம் கல்வி ஆண்டில் சீருடைகளில் மாற்றம் செய்யப்பட்டு வழங்கப்பட்டது. அதன்படி, 1 முதல் 5ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு கரும்பச்சை நிற கால்சட்டையும், பாவாடையும், இளம்பச்சைநிற மேல்சட்டையும் வழங்கப்பட்டது. 6 முதல் 8ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு சந்தனநிற பேன்ட், சந்தனநிற கட்டமிடப்பட்ட மேல்சட்டையும், மாணவிகளுக்கு சுடிதார், மேல்கோட்டும் வழங்கப்பட்டன.