திருப்பத்தூர்: திருப்பத்தூர் அடுத்த நத்தம் கூட்ரோடு பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ்(25), கூலித்தொழிலாளி. குடிபோதையில் இருந்த அவர் நேற்று வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமியை மறைவான இடத்துக்கு தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் சிறுமியை வீட்டின் அருகே விட்டுவிட்டு தப்பிச்சென்றுவிட்டார்.இதற்கிடையில் கதறி அழுதபடி வீட்டுக்க சென்ற சிறுமி, தனது தாயிடம் கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது தாய், மகளை திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். பின்னர் தருமபுரி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.