டெல்லி: குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக அடுத்த கட்ட போராட்டம் குறித்து டெல்லியில் இன்று எதிர்க்கட்சி தலைவர்கள் கூடி தீர்மானிக்கின்றனர். நாடு முழுவதும் ஒரு மாதமாக போராட்டம் நீடித்து வரும் நிலையில் காங்கிரஸ் விடுத்த அழைப்பை ஏற்று எதிக்கட்சி தலைவர்கள் இன்று கூடுகின்றனர். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தேசிய அளவில் பொதுவான போராட்டத்தை முன்னெடுப்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படுகிறது. இதில் திமுக, சமாஜ்வாதி, தேசியவாத காங். மற்றும் இடதுசாரிகள் பங்கேற்பது உறுதியாகியுள்ளது.