இலங்கை பிரதமர் இந்தியா வருகை

புதுடெல்லி: இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே அடுத்த மாதம் தொடக்கத்தில் இந்தியா வருகிறார். அப்போது அவர் பிரதமர் மோடியை சந்தித்து பேச இருக்கிறார். இதில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து கலந்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, கடந்த வாரம் இந்தியா வந்த இலங்கை வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்த்தனே, மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து, வர்த்தகம், முதலீடு போன்றவற்றில் இருநாடுகளுக்கு இடையிலான உறவை வலுப்படுத்துவது பற்றி பேசியது குறிப்பிடத்தக்கது.

Related Stories: