திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொச்சி மரடுவில் ஜெயின் கோரல் குடியிருப்புகள் வெடிவைத்து இடித்து அகற்றப்பட்டது. விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட புகாரில் நீதிமன்ற உத்தரவுப்படி அகற்றப்பட்டுள்ளது. நேற்று 2 கட்டடங்கள் வெடிவைத்து தகர்க்கப்பட்ட நிலையில், இன்று மேலும் 2 கட்டடங்கள் தகர்க்கப்பட்டன. விதிகளை மீறி கட்டப்பட்ட 343 வீடுகளை இடித்து தடைமட்டமாக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து மாநில அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. கட்டிடத்தை சுற்றியுள்ள மக்கள் வெளியேற்றப்பட்டு 200 மீட்டர் தொலைவுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கேரள மாநிலம் கொச்சி அருகே உள்ள மரடு பகுதியில் சுற்றுச்சூழல் விதிகளை மீறி, கட்டப்பட்டிருந்த 343 வீடுகள் அடங்கிய அடுக்குமாடிக் குடியிருப்புகளை இடிக்க கடந்த செப்டம்பர் மாதம் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி ஜனவரி 11 மற்றும் 12ம் தேதிகளில் அந்த கட்டங்களை தகர்க்க கேரள அரசு திட்டமிட்டது.