சென்னை: சென்னை எஸ்.எம்.பி. கோயில் தெருவை சேர்ந்தவர் ஸ்ரீதரன். கடந்த நவம்பர் 15ம் தேதி பட்டப்பகலில் இவரது வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த 18 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இதுகுறித்து, ஸ்ரீதரன் ஐஸ்ஹவுஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், கொள்ளை நடந்த வீட்டின் அருகே இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தபோது, ஆசாமி ஒருவர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.