சிவகாசி: சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில் மனைவி தலைவராகவும், கணவர் துணைத்தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டனர். விருதுநகர் மாவட்டம், சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில் 31 வார்டுகள் உள்ளன. இதில், திமுக 17, அதிமுக 9 மற்றும் புதிய தமிழகம், அமமுக, காங்கிரஸ், மதிமுக, சுயேட்சை வேட்பாளர் தலா ஒரு இடங்களில் வெற்றி பெற்றனர். ஒன்றியத்தலைவர், துணைத்தலைவருக்கான தேர்தல் சிவகாசி யூனியன் அலுவலகத்தில், தேர்தல் அதிகாரி தினேஷ்குமார் முன்னிலையில் நேற்று நடந்தது. தலைவர் பதவிக்கு 6வது வார்டு திமுக கவுன்சிலர் முத்துலட்சுமி விவேகன்ராஜ், 18வது வார்டு அதிமுக கவுன்சிலர் நாராணம்மாள் போட்டியிட்டனர்.