மனித தவறால் உக்ரைன் நாட்டு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது: ஈரான் ராணுவம் ஒப்புதல்

ஈரான்: உக்ரைன் விமானம் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஈரான் தொலைக்காட்சியில் தகவல் வெளியாகியுள்ளது. ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்திய போது டெஹ்ரானில் இருந்து புறப்பட்ட உக்ரைன் விமானம் கீழே விழுந்தது. மனித தவறால் உக்ரைன் நாட்டு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஈரான் ராணுவம் ஒப்புக்கொண்டது. தொழில்நுட்ப கோளாறால் விமானம் விழுந்ததாக கூறப்பட்ட நிலையில், ஈரான் தாக்கியதை ஒப்புக்கொண்டது. விமானம் விழுந்து நொறுங்கியதில் 82 ஈரானியர், 63 கனடாவினர் உள்பட 176 பேர் இறந்தனர்.

Related Stories: