சென்னை: சென்னை மாநகராட்சியில் 1000 கோடி ஊழல் நடந்திருப்பது தொடர்பான விவகாரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீது தமிழக அரசு அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளது. கடந்த டிசம்பர் 13ம் தேதி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், சென்னை மாநகராட்சியில் ஆற்று மணலுக்கு பதிலாக எம்-சாண்ட் பயன்படுத்தி அதன் மூலம் 1000 கோடி ஊழல் நடந்துள்ளது. இதுகுறித்து உடனடியாக விசாரணை நடத்தி கொள்ளையடிப்பவர்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்ளாட்சி நிர்வாகத்தை ஊழல் நாறும் நிர்வாகமாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மாற்றியிருக்கிறார்.