15 நாள் பரோலில் வெளியே வந்த ராஜிவ் கொலை கைதி

அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம்,  அருப்புக்கோட்டையைச் சேர்ந்தவர் ரவி (எ) ரவிச்சந்திரன். முன்னாள் பிரதமர்  ராஜிவ்காந்தி கொலை வழக்கில், ஆயுள் தண்டனை கைதியாக மதுரை மத்திய சிறையில்  உள்ளார். இவர், தனது தாயை சந்திப்பதற்காக ஜன. 10-ல் இருந்து 25ம் தேதி பரோல்  வழங்கி ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டது. இதையடுத்து ரவிச்சந்திரன், அருப்புக்கோட்டை ரயில்வே பீடர் ரோடு, மீனாம்பிகை நகரில் உள்ள தனது வீட்டிற்கு நேற்று காலை 9.20 மணியளவில் வந்தார். அங்கு 15 நாட்கள் தனது தாயுடன் தங்குகிறார். வீட்டின் நுழைவாயிலில் டோர் மெட்டல் டிடெக்டர் அமைக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டுள்ளது.

Related Stories: