வத்திராயிருப்பு: சதுரகிரி கோயிலில் செக் குடியரசு நாட்டை சேர்ந்த 41 பேர் நேற்றுதரிசனம் செய்தனர். மதுரை மாவட்டம், சாப்டூர் அருகே சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில், பவுர்ணமி மற்றும் பிரதோஷத்தையொட்டி, கடந்த 8ம் தேதி முதல் நாளை வரை பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று காலை செக் குடியரசு நாட்டில் இருந்து 25 பெண்கள், 16 ஆண்கள் ஆன்மீக பயணமாக சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்தனர். தாணிப்பாறை கேட்டில் வனத்துறை ஊழியர்கள், இவர்களது உடமைகளை சோதனை செய்து மலையேற அனுமதித்தனர். மலைக்கோயிலில் தங்கியிருந்து சாமி தரிசனத்தை முடித்துவிட்டு இன்று கிளம்புகின்றனர்.