சேலம்: சேலம் செவ்வாய்பேட்டையை சேர்ந்த வெள்ளி வியாபாரிகளான கோபி, கோபாலகிருஷ்ணன் ஆகியோர் கடந்த 2018 ஜூன் மாதம், கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு ரயிலில் 60 கிலோ வெள்ளி கொலுசுகளை கொண்டு சென்றனர். அப்போது, சேலம் ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் சம்பத், போலீஸ்காரர் சண்முகம் ஆகியோர் முறையான ஆவணங்கள் இல்லை என கூறி 30 ஆயிரம் லஞ்சம் பெற்றுள்ளனர். இதை செல்போனில் பதிவு செய்த அவர்கள் ரயில்வே அமைச்சகத்திற்கும், பிரதமர் அலுவலகத்திற்கும் அனுப்பி வைத்தனர்.