அமெரிக்க தூதரகம் அருகே ராக்கெட் குண்டு தாக்குதல்

பாக்தாத்: எதிரி நாடுகளால் தனது வீரர் ஒருவர் கொல்லப்பட்டாலும் அதற்கு கடுமையான பதிலடி கொடுப்பது என்பது அமெரிக்காவின் பாணி. ஆனால், ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்திய ஈரான், 80 அமெரிக்க வீரர்கள் பலியானதாக கூறியபோதிலும், ‘ஆல் இஸ் வெல்’ என்று டிரம்ப் அலட்சியமாக கூறிவிட்டு, ஈரான் மீது தாக்குதல் நடத்தாமல் அமைதியாக இருந்து விட்டார்.

இந்நிலையில், மீண்டும் ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே நேற்று முன்தினம் இரவு ராக்கெட் குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் எந்த உயிர் சேதமும் இல்லை. இத்தாக்குதலுக்கு ஈராக்கில் செயல்பட்டு வரும் ஹர்கத் அல் நுஜ்பா எனும் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

Related Stories: