சென்னை: சென்னை அடுத்த செங்கல்பட்டு மலையடி வேம்பாக்கம் கண்ணதாசன் தெருவை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி உஷா. இவர்களுக்கு 16 வயது ஒரு மகன் மற்றும் புருஷோத்தமன் (13) ஆகிய மகன்கள் உள்ளனர். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் கருத்து வேறுபாடு காரணமாக உஷா, கணவரை பிரிந்து மகன்களுடன், அதே பகுதியில் தனியாக வசித்து வருகிறார். புருஷோத்தமன் செங்கல்பட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 6ம் தேதி காலை ஏகாதசி தினத்தன்று புருஷோத்தமன், வீட்டின் அருகில் உள்ள கண்ணபிரான் கோயிலுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றான். பின்னர் வீடு திரும்பவில்லை.இதுகுறித்து செங்கல்பட்டு தாலுகா போலீசில் புகாரளித்தார். போலீசார் மாயமான மாணவனை தேடி வந்தனர். இந்நிலையில், செங்கல்பட்டு வெண்பாக்கம் அரசு ஐடிஐ பின்புறம் உள்ள பாழடைந்த கிணற்றில் கை, கால்கள் கட்டப்பட்டு அழுகிய நிலையில் சிறுவன் சடலம் மிதந்தது.