மோடி அரசால் கெட்ட பெயர்: சட்டீஸ்கர் முதல்வர் பேட்டி

சென்னை: சத்தீஷ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகல் சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள சென்னை வந்தார். காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனுக்கு அவர் வந்தார். அவருக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: உலகம் சுற்றும் மோடி, குடியுரிமை சட்ட திருத்தத்தை கொண்டு வந்த பின்பு எந்த நாட்டுக்கும் செல்வதில்லை. உலக வரைபடத்தில் இந்தியாவுக்கு ஒரு கெட்ட பெயரை மோடி அரசு ஏற்படுத்திவிட்டது. மோடியும் அமித் ஷாவும் நாட்டின் மிகப்பெரிய பொய்யராக இருக்கின்றனர். இருவரும் மக்களை கஷ்டத்திற்கு ஆளாக்கிவிட்டனர். காமராஜர் போன்ற பெருந்தலைவர்கள் இருந்த இடம், சத்யமூர்த்தி பவன். இங்கு வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: