வாஷிங்டன் : ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் பங்கேற்க இருந்த ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சருக்கு அமெரிக்கா விசா மறுத்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் நாளை நடைபெறும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் ஈரான் வெளியுறவு அமைச்சர் ஜவாத் ஷாரீப் பங்கேற்க இருந்தார். ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கை குறித்து தமது தரப்பு வாதத்தை சர்வதேச சமூகத்திடம் ஜாவத் ஷாரீப் முன்வைக்க திட்டமிட்டு இருந்தார். ஆனால் ஈரான் வெளியுறவு அமைச்சருக்கு விசா வழங்க அமெரிக்கா திடீரென மறுத்து விட்டது. தமது வருகையை கண்டு அமெரிக்கா அஞ்சுவது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ள ஷரீஃப் விசா மறுக்கப்பட்டு இருப்பது ட்ரம்ப் நிர்வாகத்தின் தோல்வியை பிரதிபலிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.