வாஷிங்டன்: பியூர்டோ ரிகோவில் கடந்த 102 ஆண்டுகளில் இல்லாத வகையில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து ஆளுநர் அவசர நிலையை பிரகனடம் செய்துள்ளார். கடந்த இரண்டு நாட்களாக அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்ட நிலையில், தற்பொழுது திங்கட்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக சாலைப் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.4 புள்ளிகள் வரை காணப்பட்டது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவிக்கிறது. இதனால் கரீபியன் தீவான பியூர்டோ ரிகோவே குலுங்கியது. இதனையடுத்து அங்குள்ள மக்கள் மிகவும் அச்சமடைந்துள்ளனர்.