புவி சூடாகிறது; அதிகளவில் தண்ணீர் குடிக்கிறது: 10 ஆயிரம் ஒட்டகங்களை சுட்டுக்கொல்ல ஆஸ்திரேலியா அரசு முடிவு

கான்பரா: ஆஸ்திரேலியாவில் 10 ஆயிரம் ஒட்டகங்களை கொல்லும் பணி இன்று தொடங்கவுள்ளது. தெற்கு ஆஸ்திரேலியாவில் அதிகம் காணப்படும் ஃபெரல் வகை ஒட்டகங்கள், மிக அதிகளவில் தண்ணீர் குடித்து மனிதர்களுக்கு பாதிப்பை  ஏற்படுத்துவதால் அவற்றை சுட்டுக்கொல்லும் முடிவை அந்நாட்டு அரசு எடுத்துள்ளது. கடுமையான வறட்சி காலங்களில் மனிதர்கள் குடியிருப்பு பகுதிக்கு வந்து தண்ணீரை ஒட்டகங்கள் குடித்துவிடுவதாகவும், வீட்டு வேலிகளை தட்டுவதுடன்,  ஏ.சியில் வழியும் நீரை குடிப்பதற்காக வீடுகளை சுற்றிச் சுற்றிவந்து இடையூறு செய்வதாகவும் புகார் எழுந்துள்ளது.

இதன் காரணமாக அவற்றை கொல்ல அப்பகுதி மக்கள் முடிவெடுத்துள்ளனர். அதன்படி, சுமார் 10 ஆயிரம் ஃபெரல் ஒட்டகங்களை சுட்டுக்கொல்லவுள்ளனர். சுடுவதில் தேர்ந்த நபர்களை கொண்டு ஹெலிகாப்டர்களில் பறந்தபடி ஒட்டகங்களை  சுட்டுக்கொல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஒட்டகங்களின் கழிவுகள் ஒரு டன் கார்பன்டை ஆக்சைடுக்கு நிகரான, மீத்தேன் வாயுவை உருவாக்குவதாக கூறப்படுகிறது. இது புவி வெப்பமயமாதலுக்கு ஒரு காரணமாக இருப்பதாகவும்  குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

முன்னதாக, ஆஸ்திரேலியாவின் நியூ சௌத் வேல்ஸ் மற்றும் விக்டோரியா மாகாணங்களில் 3 மாதங்களாக காட்டுத்தீ எரிந்து வருகிறது. இதனால் ஏரளானமான வனவிலங்குகள் உடல் கருகி உயிரிழந்துள்ளன. அத்துடன் லட்சக்கணக்கான  மரங்களும் எரிந்திருப்பதாக கூறப்படுகிறது. அண்மையில் வனவிலங்குகள் இறந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு சோகத்தை ஏற்படுத்தியது. விலங்கள் நல ஆர்வலர்களின் எதிர்ப்புகளையும் மீறி ஆஸ்திரேலியா அரசு தனது  முடிவில் உறுதியாக இருக்கிறது. இத்தகைய சூழ்நிலையில், தண்ணீரை அதிக அளவில் குடிப்பதாக கூறி ஒட்டகங்களை கொல்ல முடிவு எடுக்கப்பட்டுள்ளது உலகமெங்கிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Related Stories: