கெங்கவல்லி: சேலம் மாவட்டம், கெங்கவல்லியில் 5 கோடிக்கு விற்பனை செய்வதற்காக தோட்டத்து வீட்டில் பதுக்கி வைத்திருந்த ஐம்பொன் சிலையை, சென்னை சிலை தடுப்பு போலீசார் நேற்று மீட்டு விவசாயியை கைது செய்தனர்.
சேலம் மாவட்டம், கெங்கவல்லியை சேர்ந்த ராஜசேகர்(42) என்பவரது வீட்டில் ஐம்பொன் சிலையை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக சிலை திருட்டு தடுப்புப் பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சென்னை சிலை திருட்டு தடுப்பு பிரிவு சிறப்பு புலனாய்வு குழு எஸ்பி ராஜாராம் தலைமையிலான குழுவினர் நேற்று காலை 9 மணியளவில் கெங்கவல்லி அருகே தம்மம்பட்டி நெடுஞ்சாலையில் உள்ள ராஜசேகரின் விவசாய தோட்டத்தில் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினர். அங்குள்ள வீட்டில் பதுக்கி வைத்திருந்த ஐம்பொன்னால் ஆன அம்மன் சிலை ஒன்றை கைப்பற்றினர்.