ஊட்டி: ரசாயன பூச்சி கொல்லி மருந்துகளுக்கு தடை விதிக்கக்கூடாது என வலியுறுத்தி ஊட்டி மார்க்கெட் வளாகம் மற்றும் உழவர் சந்தையில் உள்ள கடைகள் நேற்று அடைக்கப்பட்டிருந்தன. நீலகிரி மாவட்டத்தில் 55 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் தேயிலை விவசாயமும், 7 ஆயிரம் ஹெக்டரில் மலை காய்கறிகளும் பயிாிப்படுகிறது. கடந்த 30 ஆண்டுகளில் அதிகமான ரசாயன உர பயன்பாட்டால் நிலம் மற்றும் நீர் கடுமையாக மாசுப்பட்டுள்ளது. ரசாயன உரங்கள் தொடர்ச்சியான பயன்பாட்டால் மக்களுக்கு புற்றுேநாய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்பட்டு வருகின்றன. இதனால், நீலகிரியை இயற்கை விவசாய மாவட்டமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு ெதரிவித்தது. நீலகிரியை அடுத்த 3 ஆண்டுக்குள் இயற்கை விவசாய மாவட்டமாக மாற்றிட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.