கவுகாத்தி: அசாம் மாநில அரசுப் பள்ளிகளில் 3 லட்சம் மாணவர்கள் படிப்பதாக போலி கணக்கு காட்டி, முந்தைய காங்கிரஸ் அரசு நிதி மோசடியில் ஈடுபட்டதாக இம்மாநில முதல்வர் சர்பானந்த சோனோவால் குற்றம் சாட்டியுள்ளார்.
அசாமில் முதல்வர் சர்பானந்த சோனோவால் தலைமையிலான பாஜ ஆட்சி நடக்கிறது. இங்கு தொடக்கப்பள்ளி, மேல்நிலைப் பள்ளி, ஆசிரியர் கல்வித் துறை ஆகியவை அடங்கிய `சமக்ரா சிக்ஷா அபியான்’ திட்டம் நடைமுறையில் உள்ளது. இத்திட்டத்தின் ஆய்வுக் கூட்டம் சோனோவால் தலைமையில் கவுகாத்தியில் நேற்று முன்தினம் நடந்தது. அப்போது, கடந்த 2016-17ம் கல்வியாண்டில் மாநிலம் முழுவதிலும் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை 49 லட்சமாக இருந்தது. இது, கடந்த 2018-19ம் ஆண்டில், 46 லட்சமாக குறைந்தது, முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.