சென்னை: இலங்கை, சார்ஜாவில் இருந்து சென்னைக்கு 1.10 கோடி மதிப்புள்ள 2 கிலோ 650 கிராம் தங்கக்கட்டிகள் கடத்தி வந்த 6 பேர் சிக்கினர். இலங்கையில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று அதிகாலை 3.30 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தது. அதில் இலங்கையை சேர்ந்த அசிப் அலிகான் (51), முகமது ரம்சுதீன் (52), ராமநாதபுரத்தை சேர்ந்த முகமது அசாருதீன் (21), கலந்தர் அப்பாஸ் (30) சஜில் அமின் (41) ஆகியோர் சுற்றுலா பயணியாக சென்று விட்டு வந்திருந்தனர். சந்தேகத்தின் பேரில் அவர்களை தனியறைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்தனர். அவர்களது உள்ளாடையில் தங்க கட்டிகள் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.