ஹெல்சிங்கி: பின்லாந்தில் தொழிலாளர்கள் வாரத்தில் 4 நாட்கள் பணியாற்றினால் போதும் என்ற புதிய திட்டத்தை அந்நாட்டு இளம் பெண் பிரதமரான சன்னா மரீன் முன்மொழிந்துள்ளார். இதனால் விரைவில் இத்திட்டம் அங்கு அமலுக்கு வர வாய்ப்புள்ளது. இந்தியாவில் 8 மணி நேரமாக இருக்கும் சராசரி வேலை நேரத்தை, 9 மணி நேரமாக உயர்த்த மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் திட்டமிட்டு வருகிறது. ஆனால், இதற்கு நேர்மாறாக பின்லாந்தில் தொழிலாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி அறிவிப்பை அந்நாட்டு இளம்பெண் பிரதமரான சன்னா மரீன் (34) முன்மொழிந்துள்ளார். அதாவது, பின்லாந்து தொழிலாளர்கள் இனி வாரத்துக்கு 4 நாள் வேலை பார்த்தால் போதும், அதேபோல் இப்போதுள்ள 6 மணி நேரம் அப்படியே தொடரலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.