உடுமலை: உடுமலை அருகே உள்ள அமராவதி அணையில் இருந்து திருப்பூர், கரூர் மாவட்டங்களில் சுமார் 55 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.கடந்த ஆண்டு செப்டம்பர் 20ம் தேதி பழைய ஆயக்கட்டு பாசன பகுதிக்கு ஆற்றிலும், புதிய ஆயக்கட்டு பாசன பகுதிக்கு பிரதான கால்வாயிலும் மற்றும் கல்லாபுரம், ராமகுளம் வாய்க்கால்களிலும் தண்ணீர் திறந்துவிடப்பட்டது.உரிய இடைவெளிவிட்டு தண்ணீர் வழங்கப்பட்டு, நவம்பர் 27ம் தேதி தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. மொத்தம் 3 ஆயிரம் மில்லியன் கனஅடி நீர் திறக்கப்பட்டது.