சென்னை: உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவைவிட திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்றது. ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் அதிமுகவுக்கு கடும் பின்னடைவாகவே கருதப்படுகிறது. இந்த நிலையில் தமிழக சட்டப்பேரவை கூட்டம் நேற்று தொடங்கியது. இதையடுத்து அதிமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் கூட்டம் நேற்று மாலை 6 மணிக்கு சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தலைமையில் நடைபெற்றது. இதில், உள்ளாட்சி தேர்தலில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காததற்கு என்ன காரணம் என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. வரும் 17ம் தேதி எம்ஜிஆர் பிறந்தநாள் விழாவை கொண்டுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.